"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விளக்கம் வந்த பின்பு விசாரணை துவங்கப்படும்"


கோவை, அக்டோபர் 30: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விளக்கம் வந்த பின்புதான் விசாரணை துவங்கப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 5-ம் தேதி அவர் காலமானார்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவினரும், எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக நீதி விசாரணை அல்லது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி நிருபர்களைச் சந்தித்த முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். விசாரணை ஆணையத்தின் தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்து கடந்த செப்டம்பர் 25-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் அவருக்கு அலுவலகம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணைய அலுவலகத்துக்கு கடந்த 27-ம் தேதி வந்த அவர் பணிகளைத் தொடங்கினார்.

இதனிடையே இன்று ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டில் இருந்து விசாரணை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கோவையில் ஒரு துக்கநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆறுமுகசாமி கோவை வந்தார்.

அப்போது அவர் கூறுகையில், "ஜெயலலிதாவின் மரணம் குறித்து 15 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவைகள் அனைத்தும் பெறப்பட்ட பின்னரே விசாரணை துவங்கப்படும். இரு நாட்களுக்குப் பிறகு சென்னை சென்ற பின்புதான் இதுகுறித்தான முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...